Monday, December 8, 2008

தலைவியின் ஏக்க பெரு மூச்சு.......

..

 

காளை வருவான் காலையிலே............!

 காதல் வரும் தேரினிலே.........!

 கன்னி இவள் பார்வையிலே...........!

கண்ணன் தெரிவான் மனதினிலே.......!.

மல்லிகை பூச் சூட..........

 மங்கை இவள் மணம் மகிழ..........

துள்ளி வருவானோ..........அள்ளி தருவானோ..............!?

முத்தங்கள் நூறாக .....அத்தனையும் தேனாக..........!

 வண்டை தேடும் பூவானேன்.......!

காமத்துக்கே பலியானேன்...........!

காத்திருந்தேன் வருவாயோ.........?

கட்டி அணைத்து முத்தம் தருவாயோ....?

பேதை மனம் புரியலையோ..........?!

 விழி பேசும் மொழி அறியலையோ...........?

ஏகாந்த இரவினிலே.......வெண்ணிலவு துணையினிலே........

வாசம் இழந்திருந்தேனே................

வாசனையாக வருவாயோ..........!?

 

இரா.வெங்கடேஷ்

 

No comments: