Tuesday, July 20, 2010

விடுதலை போராளி தலைவர் பிரபாகரன்
இது அபத்தமான கேள்வி,பிரபாகரன் பயங்கிரவாதி என்று சொல்லுபவர்களுக்கு என்ன தகுதி இருக்கு.

போராட்டம் இரண்டு வகை படும் ஒன்று முதவாதம் மற்றொன்று தீவிரவாதம்,

அகிம்சை வழியில் போராடுவது மிதவாதம்,

ஆயுத வழியில் போராடுவது தீவிரவாதம்,

(இதில் இரண்டிலும் கலந்து கொள்ளாமல் இவற்றில் ஒன்றை ஆதரித்துக் கொண்டு இருப்பது நம்மை போன்ற உலகில் எந்த மற்றத்தையும் ஏற்படுத்த இயலாத வக்கத்த ஆனால் தன்னை அறிவிஜீவியாக பாவித்துக் கொண்டு இருக்கும் ஒரு கூட்டம்,)

அகிம்சை வழி அதை அதிகம் விளக்கவேண்டியதில்லை,அது நம்மவருக்கு தெரியும்,

ஆனால் ஆயுத வழி போராத்தை தான் பயங்கிரவாதம் என்று சிலர் குழும்பிக்கொள்கிறார்கள்.

அப்படி என்றால் தன் சகோதரனை கொன்ற அர்ஜுனன் தீவிரவாதியா,?
கொல் என்று உபதேசித்த கிருஷணர் தீவிரவாதியா?

போராட்டத்தில் சில சமயங்களில் நம் இனத்தை சேர்ந்தவர்களே நமக்கு எதிராக செயல்படும் போது அவர்களை போராட்டத்தின் வலிமை குறையாமல் இருக்க அவர்களை கொல்வதால் அந்த போராட்டத்தை பயங்கிரவாதம் என்று கூறிவிடமுடியாது,

ஒரு இயக்கம் தோற்று விடாமல் பயணிக்க சில சமயங்க்ளில் தன் இனத்தை சேர்ந்தவரையே கொல்ல நேரிடுகிறது,இது ஆயுத போராட்டத்தில் தவிர்க்க முடியாது,
ஒரு சில பேரை கொன்றதால்,புலிகளை பயங்கிரவாதி என்று சொல்லும் இவர்கள்,பல இலட்சம், தமிழர்களை கொன்று குவித்த சிங்களவர்களை கொன்று குவித்த சிங்கள அரசு பயங்கிரவாதமாக தெரியவில்லையா?,
இதில் நாம் முதலில் எதை எதிர்க்க வேண்டும் என்ற தெளிவு இருந்தால் புலிகளை பயங்கிரவாதி என்று கூறமாட்டோம்,
சிங்கள அரசு கூட ,தமிழர்க்கு ஆதரவாக எழுதிய சில சிங்கள பத்திரிகையாளர்களை கொன்று உள்ளது,
தமிழர்க்கு ஆதரவாக பேசியதால் ,சட்டம் கொண்டு வர முயன்றதால் சிங்கள அதிபர் பாண்டாரநாயகா ,சிங்கள பொளத்தர்க்ளாலேயே கொல்லப்பட்டார்.

இதை புலிகளை பயங்கிரவாதிகள் என்று கூறுபவர்கள் எண்ணி பார்க்கவேண்டும்,

ஒரு விடுதலை போராட்டத்தை ஆதரிப்பதற்கு தகுதி தேவையில்லை,மனித நேயம் உள்ள அனைத்து இனத்தவரும் ஆதரிக்கலாம்,
ஆனால் போராட்டத்தை,புலிகள் நடத்தும் விடுதலை போராட்டத்தை குறை கூறவேண்டும் என்றால் அதற்கு ஒரு தகுதி வேண்டும்.
வெந்ததை தின்று சொகுசு வாழ்க்கை வாழும் இவர்கள் மனித நேயம் தெரியாத இவர்கள் விடுதலை புலிகளை,பிரபாகரனை குறை கூற தகுதி இல்லை

No comments: